Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனைகளை குறைக்க கூடாது: டாக்டர் ராமதாஸ்

Written By siva
Updated: செவ்வாய், 29 ஜூன் 2021 (16:40 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனை மருத்துவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் பாராட்டியுள்ளனர். பரிசோதனை அதிகரிக்க அதிகரிக்க தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் தினசரி  கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை!
 
தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
 
 

எல்லாம் காட்டு

எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...

விஜய் இருக்கும்வரை உங்க தலைவர் வரமாட்டார்!.. சட்டசபையில் காரசார வாக்குவாதம்!..

சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?

இளைஞரை அறைந்த எஸ்.ஐ!.. திருப்பி அறைந்த இளைஞர்!.. விசிக போராட்டத்தில் பரபரப்பு!. (வீடியோ)..

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments