திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்: என்ன காரணம்?

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (07:47 IST)
திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்: என்ன காரணம்?
திமுக செய்தி தொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே 
 
இன்னும் ஒரு சில நாட்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ள நிலையில் அவருக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உட்பட பல தலைவர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார்
 
அவரது சமூக வலைதள பதிவில் செய்யப்பட்டிருந்த விமர்சனம் திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் லஞ்சம் வாங்கியவர்கள் சஸ்பெண்ட்.. இப்படி ஒரு செய்தியாவது சேகர்பாபு அமைச்சராக இருக்கும்போது வந்துச்சா?

பெரிய ஓட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.. பொங்கல் சூப்பரா இருக்குது.. அம்மா ஆட்சியில கூட இப்படி இருந்ததில்லை.. அம்மா உணவக பயனர்கள்..

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

சிங்கப்பெண் விழா ரத்து!.. ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு போன முதல்வர்!.. கொதிக்கும் நெட்டிசன்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments