உருவாகியது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!!

சனி, 18 டிசம்பர் 2021 (11:33 IST)
தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நில நடுக்கோட்டு பகுதியில் இந்திய பெருங்கடல் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
 
கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் 17 ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. 
 
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நில நடுக்கோட்டு பகுதியில் இந்திய பெருங்கடல் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்!. பாட்டிலுக்கு 10 ரூபா சிக்கலுக்கு தீர்வு!..

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி... இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: செப்டம்பர் 17-ல் தொடக்கம்!

மெட்ரோ வசம் செல்லும் பறக்கும் ரயில்: ரூ.4,500 கோடியில் சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடம் அதிரடி மாற்றம்!

4 கோடி காரில் சென்று பாத்திரம் கழுவும் வேலை செய்யும் சீன பெண்!. இணையத்தில் வைரல்..

அடுத்த கட்டுரையில்
Show comments