6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்கள்: பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:21 IST)
நடப்பு கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளுக்கு தமிழகம் முழுவதும் பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன் பிறகு அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் அமல்படுத்த படம் என்று கூறப்படுகிறது.  
 
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே இதில் பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இதற்கு முன்னர் பொது தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் ஒரே பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments