ஆகஸ்ட் 9ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: ஓடிடியில் நேரடி ஒளிபரப்பா?

வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:34 IST)
கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவு விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதை அடுத்து இந்த விழாவை நேரடியாக ஒரு முன்னணி ஓடிடி நிறுவனத்தில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் நிறைவு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல்களும் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

எல்லாம் காட்டு

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை.. அனுமதிக்கப்பட்ட அளவுகளில் தான் கல் வெட்டப்பட்டதா? அமைச்சர் பிரபு உத்தரவு

அதெப்படி புதிய ஆட்சி அமைத்த 10 நாட்களில் உடனே மின்வெட்டு ஏற்படும்.. சதியா? அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கமா?

விசிகவை ஒருமுறை கூட கோட்டைக்குள் அனுமதிக்காத திராவிட அரசுகள்.. முதல் ஆட்சியிலே பதவி கொடுத்து அழகு பார்த்த தவெக..!

இந்தியாவே பிரமிக்கும் அமைச்சரவை இது!. ஆதவ் அர்ஜுனா பேட்டி!...

அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது!. தவெக நிர்வாகிகளுக்கு என்.ஆனந்த் அறிவுரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments