தாளாளர் பாலியல் தொல்லை: வீதிக்கு வந்து போராடிய ஏஞ்சல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவிகள்!

புதன், 23 நவம்பர் 2022 (11:19 IST)
தாளாளர் பாலியல் தொல்லை: வீதிக்கு வந்து போராடிய ஏஞ்சல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவிகள்!
சென்னை ஏஞ்சல்ஸ் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து மாணவ மாணவிகள் வீதிக்கு வந்து திடீரென போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி திடீரென 300க்கும் மேற்பட்ட இளைஞர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து காவல் துறையினர் போராடி வரும் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலியல் தொல்லை புகாருக்கு ஆளான வினோத் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.. பணிக்கு திரும்புங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்...

இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..

10 வருடம் கழித்து இப்போது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம்.. அம்மா உணவக பயனாளிகள் நெகிழ்ச்சி..

15 ஆண்டுகளாக குடிநீர் குழாய் இன்றி தவித்த சோழிங்கநல்லூர் மக்கள்.. 15 நாளில் 40 குழாய்கள் போட்ட தவெக எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்