Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பிளஸ் 2 ரிசல்ட்.. நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம்..!

Written By Siva
Updated: ஞாயிறு, 5 மே 2024 (16:41 IST)
காலை 9 மணிக்கு பிளஸ் டூ ரிசல்ட் வர இருக்கும் நிலையில் நாளை முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் அடுத்ததாக கல்லூரிகளில் சேர தயாராகி வரும் நிலையில் நாளை ரிசல்ட் வெளிவர உள்ளது. நாளை காலை ரிசல்ட் வந்தவுடன் மாணவர்கள் எந்த கல்லூரிகளில் சேரலாம் என்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என்ற நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரிசல்ட் பார்த்த ஒரு சில மணி நேரம் மணி நேரங்களிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் மருத்துவம் போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Edited by Siva
 

எல்லாம் காட்டு

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

மீனவர்களுக்கான நிதியை குறைத்துவிட்டதா தவெக பட்ஜெட்.. உண்மை என்ன?

இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திருப்தி இல்லை: கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments