தேர்தலுக்கு 2 நாள் இருக்கும்போது திமுகவில் சேர்ந்த அதிமுக வேட்பாளர்!

Written By Mahendran
Updated: புதன், 16 பிப்ரவரி 2022 (11:42 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென திமுகவில் இணைந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிப்ரவரி 19 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முத்துப்பாண்டி என்பவர் இன்று அமைச்சரவை பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்தனர்
 
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments