Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லையா? அரசு தேர்வு இயக்ககம் மறுப்பு!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 2 ஜூன் 2022 (10:50 IST)
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான செய்திக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 
கடந்த சில நாட்களாக பொதுத்தேர்வு நடைபெற்றது என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். தற்போது பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. 
 
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11 ஆம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10 ஆம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
 
இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான செய்திக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாட வாரியான தேர்வு எழுதாதவர்கள் எண்ணிக்கை குறித்து தினமும் தகவல் வெளியிட்ட நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...

அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. நெட்டிசன்களின் பதிவுகள் வைரல்..

2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் .. தவெக அரசு அதிரடி அறிவிப்பு...

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அடுத்த கட்டுரையில்
Show comments