10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (12:23 IST)
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு மற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு மறு கூட்டல் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வழியாகியுள்ளது. 
 
10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று காலை வெளியான நிலையில் சுமார் 92 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் குறைவாக மதிப்பெண் இருப்பதாக கருதினால் மறு கூட்டலுக்கு மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
அதேபோல் விடைத்தாள் நகல் பெற 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை  அறிவித்துள்ளது 
 
மேலும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூலை 2ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ள நிலையில் இதற்கான விண்ணப்பம் பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments