ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்: சரத்குமார் நம்பிக்கை
நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம், போராடுவோம், வெற்றி பெறுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் பணிக்குழு நிர்வாக கமிட்டியின் பொறுப்பாளர்களாக தலைவர் ஆர்.சரத்குமார் நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு எடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டம் தொடர்பாக ஆர்.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
''இலங்கை மண்ணில் அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற உணர்வுமிக்க கோரிக்கைகள் தமிழகமெங்கும் எரிமலையாக வெடித்துக்கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக்கூட தயங்கமாட்டோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தீக்குளித்து இறந்துபோன முத்துக்குமார், ரவி, ரவிச்சந்திரன் என்ற பட்டியலில் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமரேசன் என்பவர் தீக்குளித்து இறந்திருப்பது நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை பிரச்சனைக்காக தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலை மேலும் தொடரக்கூடாது என்பதை மீண்டும், மீண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.
அதுவரையில் இனியும் தங்களை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் என் அருமை தமிழ்ச் சகோதரர்கள் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
|
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் பணிக்குழு நிர்வாக கமிட்டியின் பொறுப்பாளர்களாக தலைவர் ஆர்.சரத்குமார் நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு எடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டம் தொடர்பாக ஆர்.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
''இலங்கை மண்ணில் அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற உணர்வுமிக்க கோரிக்கைகள் தமிழகமெங்கும் எரிமலையாக வெடித்துக்கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக்கூட தயங்கமாட்டோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தீக்குளித்து இறந்துபோன முத்துக்குமார், ரவி, ரவிச்சந்திரன் என்ற பட்டியலில் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமரேசன் என்பவர் தீக்குளித்து இறந்திருப்பது நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை பிரச்சனைக்காக தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலை மேலும் தொடரக்கூடாது என்பதை மீண்டும், மீண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.
அதுவரையில் இனியும் தங்களை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் என் அருமை தமிழ்ச் சகோதரர்கள் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
