சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு மாடுமேய்க்க சென்ற இருவரை கரடி கடித்து குதறியது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது ராமபயலூர்தொட்டி. இங்கு வசிப்பவர்கள் மாரி (55), அம்பியன் (45), மாதையன் (42), ஜடையன் (45). இவர்கள் நான்கு பேரும் அருகில் உள்ள கல்முக்கை வனப்பகுதிக்கு தங்கள் மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தபோது இவர்கள் நான்குபேரும் அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் உட்காந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அருகே இருந்த புதரில் இருந்து திடீரென ஒரு கரடி...