டெல்லி கற்பழிப்பு விவகாரம்: மாணவிகளுக்கு தடியடி
FILE
நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை அடுத்து கொதித்துள்ள மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு பல பொதுநல சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில் சட்டக் கல்லூரி, மருத்துவ கல்லூரி, மாணவ மாணவிகள் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
அவர்கள் மாளிகைக்குள் நுழைய முற்பட்டபோது காவல்துறையினர் அவர்களைத் தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதற்கு கலையாத கூட்டம் மீது பின்னர் தடியடி நடத்தப்பட்டது.
தடியடி நடத்தினாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவிகள் கூறியுள்ளனர். இதே போல இன்று காலை முதல் தலைநகரில் உள்ள இந்தியா கேட், ராஜ்கோட் முக்கிய சாலைகள் அனைத்தயும் நூற்றுக்கணக்கான மாணவிகள் முற்றுகையிட்டுள்ளனர். தற்போது தேசிய மாணவர் இயக்கமும் இவர்களின் போராட்டதிற்கு கைகொடுத்துள்ளதால் டெல்லியில் போராட்டம் மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதளம் மூலம் ஆதரவு கொடுக்கப்பட்டு இத்தகைய பெரிய மாணவ கூட்டம் தலைநகரில் குவிந்துள்ளது.
