மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிய இருவர் கைது!
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்பேசிகளின் சிம் கார்டுகளை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கியதாக, கொல்கத்தாவாசி ஒருவரும், ஸ்ரீநகர்வாசி ஒருவரும் என இருவர் கைதாகியுள்ளனர்.
இது மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு விசாரணையின் முக்கியத் திருப்பம் என்று சிறப்பு அதிரப் படையினர் கூறினர்.
கொல்கத்தாவில் உள்ளூர்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சால் வர்த்தகம் செய்துவந்த, ஸ்ரீநகரில் ரெஹான்பரி பகுதியைச் சேர்ந்த முக்தார் அஹ்மது ஷேக்(35) தலைநகர் டெல்லியில் நேற்று சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்.
இதேபோல கொல்கத்தாவில் தில்ஜாலா சாலையில் வசிக்கும் தெளசீஃப் ரெஹ்மான்(26) என்பவர் ஹவுரா ரயில் நிலையத்தில் நேற்று சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் போலி ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சிம் கார்டுகளில் சில மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சிறப்பு அதிரடிப் படைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
போலி ஆவணங்களைக் கொடுத்து தெளசீஃப் 13 சிம் கார்டுகளை வாங்கி ஷேக்கிடம் கொடுத்துள்ளார். அதை ஷேக் யாருக்கோ கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரையும் டிசம்பர் 19 வரை காவலில் வைக்கும்படி கொல்கத்தா மாநகர முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். ஆனந்த் உத்தரவிட்டார்.
இது மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு விசாரணையின் முக்கியத் திருப்பம் என்று சிறப்பு அதிரப் படையினர் கூறினர்.
கொல்கத்தாவில் உள்ளூர்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சால் வர்த்தகம் செய்துவந்த, ஸ்ரீநகரில் ரெஹான்பரி பகுதியைச் சேர்ந்த முக்தார் அஹ்மது ஷேக்(35) தலைநகர் டெல்லியில் நேற்று சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்.
இதேபோல கொல்கத்தாவில் தில்ஜாலா சாலையில் வசிக்கும் தெளசீஃப் ரெஹ்மான்(26) என்பவர் ஹவுரா ரயில் நிலையத்தில் நேற்று சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் போலி ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சிம் கார்டுகளில் சில மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சிறப்பு அதிரடிப் படைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
போலி ஆவணங்களைக் கொடுத்து தெளசீஃப் 13 சிம் கார்டுகளை வாங்கி ஷேக்கிடம் கொடுத்துள்ளார். அதை ஷேக் யாருக்கோ கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரையும் டிசம்பர் 19 வரை காவலில் வைக்கும்படி கொல்கத்தா மாநகர முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். ஆனந்த் உத்தரவிட்டார்.
