1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பாஸ்வான் பாதுகாப்பு: பிரதமர் உறுதி!

ராம்விலாஸ் பாஸ்வான் உறுதி பிரதமர் மன்மோகன் சிங்
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சென்ற வாகனத்தை குறிவைத்து நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாஸ்வானுக்கு பாதுகாப்பை மேம்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லியில் பிரதமரைச் சநதித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், தனது பாதுகாப்பை மேம்படுத்த பிரதமர் உறுதி அளித்திருப்பதாகக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் நிலைக்குழு விசாரணைக்கு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உத்தரவிட்டுள்ளார்.
About Writer
Webdunia