புது டெல்லி: அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், விலைவாசி உயர்வு, ஜம்மு- காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.