மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்துள்ளவர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு ஜம்முவில் இன்று ஊர்வலம் நடத்தினர். சுமார் 1500 பேர் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அகதிகள் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.கடந்த 60 ஆண்டுகளாக எங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் இழந்த நிலம், வீடுகளுக்கு உரிய இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை. கடந்த 1947, 1965, 1971...