மும்பை பங்குச் சந்தையில், அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பித்தனர். இதனால் காலையிலேயே பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. காலையில் 11.30 மணிக்குள் 162 புள்ளிகள் அதிகரித்தது. காலையில் 11.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 17,313.48 என்ற அளவை தொட்டது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட, 162.90 புள்ளிகள் உயர்வு. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டான...