மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலையில் இருந்து பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. மதியம் சுமார் 2.45 மணிக்கு பிறகு குறியீட்டு எண்கள் குறைய துவங்கின. கடைசி பத்து நிமிடங்களில் சிறிது அதிகரித்தது. இதனால் தான் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்தன.