வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோம்பு !!

செவ்வாய், 21 ஜூன் 2022 (15:37 IST)
சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், நம் உடலில் தேவையில்லாமல் தங்கி உள்ள கொழுப்புகளை வெளியேற்றும், குறிப்பாக வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது. இதனால் உடல் எடை குறையும்.


சோம்பை நீரில் போட்டு காய்ச்சி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்க படுகின்ற மெலட்டோனின் ஹார்மோனை சீராக சுரக்க செய்கிறது. இதனால் நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சோம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

சோம்பு நம் உடலில் உள்ள நீர்சத்துக்களை வெளியேற்றக்கூடியது. முக்கியமாக சிறுநீர் வழியாக வெளியேற்றக்கூடியது. இதனால் சிறுநீரக பாதையில் ஏதேனும் தோற்று ஏற்பட்டிருந்தால் அல்லது சிறுநீரக கற்கள் இருத்தால் அதை கரைக்கவும், போக்கவும் சோம்பு தண்ணீர்  நல்ல மருந்தாக பயன்படுகிறது.

பசியின்மை, மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சோம்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சொம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பிசம் ஆகியவற்றிற்கு சோம்பு நல்ல தீர்வு தரும்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments