திங்கள், 28 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 28 அக்டோபர் 2024 (11:31 IST)

மிகவும் மோசமான காற்றின் தரம் மூச்சுத்திணறலால் டெல்லி மக்கள் அவதி!

மிகவும் மோசமான காற்றின் தரம் காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிப்படுவதாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகரமான டெல்லி கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு காரணமாக பெரும் சிக்கலில் உள்ளது. குறிப்பாக தீபாவளி தொடங்கியுள்ள நேரத்தில், டெல்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், குறிப்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறது.

மேலும், பனிக்காலத்தில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை காற்றின் தரம் 264 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன் காரணமாக, டெல்லி மக்கள் தொண்டையடைப்பு, மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காற்றின் தரம் பூஜ்ஜியம் முதல் 50 வரை இருக்க வேண்டிய நிலையில், 264 என்பது மிகவும் மோசமான நிலை எனவும், டெல்லி அரசு உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva