காவிக்கொடி ஒருநாள் தேசியக்கொடியாக மாறும்! – பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை!

திங்கள், 30 மே 2022 (17:12 IST)
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரப்பா. சமீபத்தில் ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் சமீபத்தில் இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தேசிய கொடி குறித்து பேசிய அவர் “அரசியல் சாசனப்படி மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக உள்ளது. அதனால் அதற்கு உரிய மரியாதையை அளிக்கிறோம். ஆனால் காவிக்கொடி தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவிக்கொடி எதிர்காலத்தில் தேசிய கொடியாகும் என்பதில் சந்தேகமில்லை” என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

15 வருடங்களுக்கு பின் வீட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. பின்னணி என்ன?..

இது விளம்பர அரசு அல்ல.. செய்து காட்டும் அரசு.. மஹிந்திரா நிறுவனத்தின் புதிய புரோஜக்ட்.. 1500 பேருக்கு வேலை கிடைக்கும்...!

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு ஏமாற்றும் அரசு அல்ல தவெக அரசு.. உண்மையான தொழிற்சாலைகள் அமைவதை வைத்தே மதிப்பீடு.. அமைச்சர் கீர்த்தனா

விஜய்யை கேலி செய்யாத ஊடகம் மிக குறைவு.. விஜய்யை இழிவுபடுத்தாத பத்திரிகையாளர்களே இல்லை.. இந்த லட்சணத்தில் எப்படி பேட்டி கொடுப்பார்?

51 லட்சம் செலவு செய்து சுரங்கப்பாதை அமைத்தார்களா திமுக அரசு ? வெறும் குழியை தோண்டிவிட்டு பணம் ஸ்வாகாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments