கிரிப்டோகரன்ஸி தடை செய்தி எதிரொலி: திடீரென சரிந்த மதிப்பு!

புதன், 24 நவம்பர் 2021 (11:56 IST)
கிரிப்டோ கரன்சியை  மத்திய அரசு தடை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான புதிய மசோதா கொண்டுவரப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக பல வகையான தனியார் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் 69 ஆயிரம் டாலராக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது திடீரென சுமார் 55 ஆயிரம் டாலர் என உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதே போல் மேலும் பல தனியார் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு ஒரு சதவீதத்திற்கும் மேலாக சரிந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
 
 

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments