ரிலையன்ஸெல்லாம் பின்னாடி போ; முதலிடத்தை பிடித்த டாடா!

புதன், 11 மார்ச் 2020 (14:14 IST)
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ள டாடா.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தொழில்கள் சுணக்கம் கண்டுள்ளன. இதனால் உலகளவில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்திய அளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் 12.35 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.88 லட்சம் கோடி முதலீட்டுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேசமயம் 7.40 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு இரண்டாம் இடத்தில் இருந்த டாடா கன்சல்டன்சி நிறுவனம் சரிவை சந்தித்து 7.06 லட்சம் கோடியாக உள்ளது.

இரண்டு நிறுவனங்களுமே சரிவை சந்தித்திருந்தாலும் டாடாவை விட ரிலையன்ஸ் அதிக சதவீதத்தில் சரிவை சந்தித்துள்ளதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments