மீண்டும் ரூ.37,000-த்தை கடந்த தங்கம் விலை!

திங்கள், 31 மே 2021 (10:46 IST)
ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளது.     

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனிடையே இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 
 
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடனே தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,628 விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 136 உயர்ந்து ரூ.37,024-க்கு விற்பனையாகிறது.
 
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.60 விலை உயர்ந்து ரூ.76.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

10 நிமிடங்கள் மட்டுமே விஜயை சந்தித்த மோடி!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?!..

அடுத்த கட்டுரையில்
Show comments