Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

Written By sinoj
Updated: வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:08 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 14 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதுவரை மும்பை அணி 8 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. இரண்டாவது கட்டமாக நடந்த முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் மும்பை இன்று வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் அடித்தால் டி-20 போட்டிகளிலேயே 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.
இதனால் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி இந்த சாதனை படைக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

மேலும், இப்பட்டியலில் ரெய்னா 324 சிக்சர்களுடன் 2 வது இடத்திலும், கோலி 315 சிக்ஸர்களுடன்  3 வது இடத்திலும்,  உள்ளனர்.  

எல்லாம் காட்டு

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments