சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:05 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 14 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதுவரை மும்பை அணி 8 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. இரண்டாவது கட்டமாக நடந்த முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் மும்பை இன்று வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் அடித்தால் டி-20 போட்டிகளிலேயே 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.
இதனால் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி இந்த சாதனை படைக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

மேலும், இப்பட்டியலில் ரெய்னா 324 சிக்சர்களுடன் 2 வது இடத்திலும், கோலி 315 சிக்ஸர்களுடன்  3 வது இடத்திலும்,  உள்ளனர்.  

எல்லாம் காட்டு

ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments