டாஸ் வென்று பேட்டிங் எடுத்த ரோஹித் சர்மா! சென்னைக்கு சேஸிங் சாதகமா?

ஞாயிறு, 12 மே 2019 (19:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமாக்ஸ் போட்டியான இன்று இறுதிப்போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் மும்பை கேப்டன் ரோஹித்சர்மா டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். 
இந்த தொடரில் பலமுறை டாஸ் வென்ற தோனி, இம்முறை டாஸ் தோல்வி அடைந்தது அதிருப்தி அடைந்தாலும், இன்று டாஸ் வென்றாலும் பந்துவீச முடிவு செய்வேன் என்று தோனி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய நிலையில் சிஎஸ்கே அணிக்கு சேஸிங் தான் சாதகம் என்றும் கூறப்படுகிறது
 
இன்றைய சென்னை அணியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தோனி கூறியுள்ளார். அந்த அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் இன்றைய மும்பை அணியில் டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, பொல்லார்ட், மெக்லன்கென், ராகுல் சஹார், மலிங்கா, பும்ரா ஆகியோர் உள்ளனர்.

எல்லாம் காட்டு

15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..

முதல் ஓவரில் 3 விக்கெட், மெய்டன்.. இந்த ஓவரை வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அணி உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கேட்ட கேள்வி...

சூர்யகுமார் யாதவ் பதவி அவுட்.. கேப்டன் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்.. அதிரடி தொடருமா?

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஹிண்ட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments