ஐபிஎல்: 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் சென்னை!

புதன், 23 மே 2018 (16:08 IST)
ஐபிஎல் பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கபடும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 6 முறை இறிதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை பெற்றுள்ளது. இதுவரை சென்னை அணி 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சென்றது.
 
இதில் 2010ம் ஆண்டில் மும்பைக்கு எதிரான போட்டியிலும், 2011ம் ஆண்டில் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

எல்லாம் காட்டு

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments