ரூ.4,299-ல் ஃபாரின் டூர்: ஜெட் ஏர்வேஸ் அதிரடி ஆஃபர்!

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:53 IST)
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட் மீது குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து அதிரடி ஆஃபர் வழங்கியுள்ளது. 
 
இந்த சலுகையை பெற ஆகஸ்ட் 21-ல் இருந்து ஆகஸ்ட் 25-க்குள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பயண காலம் செப்டம்பர் 16-க்கு பிறகு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
# இந்தியாவில் இருந்து கொழும்பு, டாக்கா, காத்மாண்டு ஆகிய இடங்களுக்கு ஒருவழிப் பாதையாக செல்ல ரூ.4.299 கட்டணம் ஆகும். திரும்பி வர எகானமி கிளாஸில் முன்பதிவு செய்தால், அதற்கு ரூ.9,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பு: இந்தியாவில் இருந்து பிரீமியம் கிளாஸில் கொழும்பு, டாக்கா, காத்மாண்டு செல்ல வேண்டுமானால் சலுகையின் கீழ் ரூ.20,699 கட்டணமாகிறது. அதில் திரும்பி வர முன்பதிவு செய்தால், ரூ.33,399 கட்டணம் ஆகிறது.
 
# அபுதாபி, துபாய், ஷார்ஜா, பஹ்ரைன், தோஹா, தம்மம், ஜெட்டாஹ், ரியாத், குவைத், மஸ்கட் ஆகிய இடங்களுக்கு செல்ல ஒருவழிக் கட்டணமாக ரூ.5,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரும்பி வர முன்பதிவு செய்தால் ரூ.12,199 செலவாகிறது. 
 
குறிப்பு: சலுகையின்றி பிரீமியம் கிளாஸில் ரூ.18,490, திரும்பி வர முன்பதிவு செய்தால் ரூ.37,999 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments