வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:21 IST)

ரூ.700 கோடி நிதியுதவி: மத்திய அரசின் திட்டவட்ட முடிவு அறிவிப்பு

கேரள வெள்ள நிவாரண நிதியாக இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் நிதிகள் குவிந்து வரும் நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்த ரூ.700 கோடியை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்தே வெளிநாட்டு நிதிகளை பெறுவதில்லை என்று இந்தியா கொள்கை அளவில் முடிவு செய்துள்ளதால் ரூ.700 கோடியை ஏற்று கொள்ள முடியாது என மத்திய அரசு கூறியதாக செய்திகள் வெளிவந்தன.
 
இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாகவும், அதுவரை பொறுமையாக இருப்போம் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் மத்திய அரசு இந்த ரூ.700 கோடி ரூபாய் நிதியுதவியை பெறும் திட்டம் இல்லை என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த நிலையில் சற்றுமுன் இந்திய வெளியுறவு அமைச்சகம், 'வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என்ற கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட் அரசு அறிவித்த ரூ.700 கோடியை கேரள அரசு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.