ரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ!

செவ்வாய், 31 ஜூலை 2018 (14:13 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளுடன் ரீசார்ஜ் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.
 
அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்பட்டும் என அறிவித்துள்ளது. மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
 
அதாவது, ரூ.399 பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், 84 நாட்களுக்கு தினமும்  வழங்கப்படும் 1.5 ஜிபியோடு 2 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். 
 
எனினும் இந்த சலுகை ஜூலை 31 வரை வழங்கப்பட்டதால், பெரும்பாலும் பயனற்றதாகவே இருந்தது. எனவே, இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாம். 

எல்லாம் காட்டு

தவெக பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை..!

தவெக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரவழைக்க, வேண்டுமென்றே மின் தடையா? திமுக ஆதரவு அதிகாரிகள் வேலையா?

அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ்

டாஸ்மாக் கடைகளை மூடியதில் எந்த தவறும் இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

ராஜ்ய சபாவுக்கு செல்லும் முதல் தவெக எம்பி யார்? போட்டியில் 5 பிரமுகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments