1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

அறை 305ல் கடவுளுக்காக காத்திருக்கும் காமெடி நடிகர்கள்

அறை 305ல் கடவுளுக்காக காத்திருக்கும் காமெடி நடிகர்கள்
இதுவரை சென்னையில்தான் அறை எண் 305 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இப்போது கடைசிகட்ட படப்பிடிப்பை தென்காசியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன். இத்தோடு படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிடுமாம்.

காமெடி கேரக்டர்கள் பண்ணிக்கொண்டிருக்கும் கஞ்சா கருப்பும், சந்தானமும் இப்படத்தின் கதாநாயகன்களாக நடித்திருப்பதால் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து கதாநாயன்களாக நடிக்காவிட்டாலும் சம்பளத்தை உயர்த்திவிடலாம் என்று பேசி வருகிறார்களாம்.

About Writer
Webdunia