நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் ரவிகிருஷ்ணா
|
காளை படத்திற்கு முன்பே இந்த புராஜெக்ட் பேசப்பட்டது. ஆனால் உடனே படத்தை தொடங்க முடியாததால்
தருண்கோபி காளை படத்திற்கு வந்துவிட்டார்.
மீண்டும் இப்போது அந்த புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார்கள். கதையெல்லாம் ரெடியாம். படத்தின் கதாநாயகனாக ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா நடிக்கிறார்.
7 ஜி ரெயின்போ காலனி படத்திற்கு பிறகு ரவிகிருஷ்ணாவிற்கு எந்த படமும் சிறப்பாக அமையாததால் தருண்கோபி இயக்கும் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்.
