பட்டாசு விளையும் பூமி!

வெள்ளி, 13 நவம்பர் 2020 (21:01 IST)
தீபாவளியை முன்னிட்டு புதுக்கவிதை:

தலைப்பு - 


பட்டாசு விளையும் பூமி  - கோபால்தாசன்

 
 
சுவாசிக்க கொஞ்சம்
உடம்பில் கொஞ்சமென வாழும்
கந்தக வாசிகள்
 
ஒரு நாளை 
உற்சாகப்படுத்துவதற்கு
அவர்கள்
நாளெல்லாம்
கால்வயிற்றிற்கும்
உயிர் பயத்திற்குமாய் செய்யும்
யுத்தம்
 
பெரியவர்
சிறியவர் என்றில்லாது
அதிகாலையில்
மதியத்திற்கு எடுத்துச் செல்லும்
உணவை விட
 
அவர்கள் 
வாழ்வினுள்ளிருக்கும்
தேவைகளின் எதிர்பார்ப்புகளே
முகம் காட்டி முணுமுணுக்கும்
வெடித்த பட்டாசுத் தாள்களின் 
சிதறல்களில்கூட
அன்றாட பணியின் 
சம்பள பாக்கியின் கணக்கு
எழுதப்பட்டிருக்கலாம்
 
கந்தக பூமியின்
ஆசை கனவுகள் எல்லாமே
பட்டாசுகளை சரம்சரமாய்
தொடுத்துக் கொண்டிருக்கும்
கூடாரங்களிலேயே
தொலைந்து போகிறது
 
அவர்கள்
உட்கொள்ளும் மருந்து
மாத்திரைகளிலிருந்து
குடிக்கும் தண்ணீர் வரையிலும்
ரசாயனத்தின் கை படாமலில்லை
 
ஆமாம்
மற்றவரின் மகிழ்ச்சிக்காக
பாடுபடும் அவர்களின்
வாழ்வில்
மகிழ்ச்சி இருக்கிறதா?

பட்டாசு விளையும் பூமி!
- கோபால்தாசன்

எல்லாம் காட்டு

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

அடுத்த கட்டுரையில்
Show comments