Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு எண்ட் கார்ட்...? கங்குலி பேட்டி!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (12:10 IST)
பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விரைவில் செய்தி வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். 
 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை அதோடு தனது ஓய்வு குறித்தும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தோனி குறித்து புதிதாக பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலில் பேசியுள்ளார். 
 
கங்குலி பேசியதாவது, வரும் 24 ஆம் தேதி நான் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுகுழுவினரை சந்திக்க உள்ளேன். அப்போது அவர்கள் தோனியின் நிலை குறித்து எடுத்துள்ள முடிவை தெரிந்துக்கொள்வேன். அதன் பின்னர்தான் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். 
மேலும் தோனியின் விருப்பதை அறியவும் அவருடன் பேச உள்ளேன் என தெரிவித்துள்ளார். என்னத்தான் கங்குலி பேசுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், இந்தியா - பங்களாதேஷ் இடையேயான டி20 தொடரிலும் தோனிக்கு அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

அடுத்த கட்டுரையில்
Show comments