விராட் கோலியின் முடிவு சரிதான்… பாகிஸ்தான் வீரர் ஆதரவு!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:42 IST)
இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி கடந்த 5 மாதங்களில் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே எழுந்த ஈகோ மோதலின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே நீரு பூத்த நெருப்பாக புகைந்து வந்தது. இந்நிலையில் இப்போது அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங் திறன் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆதாரவு தெரிவித்துள்ளார். அதில் ‘கோலியின் முடிவை நான் ஆதரிக்கிறேன். அவர் போதுமான அளவு சிறப்பான கிரிக்கெட் விளையாடி அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகமாகும் போது அது பேட்டிங் திறனை பாதிக்கவே செய்யும். இப்போது அவர் தனது பேட்டிங்கை மகிழ்ச்சிகரமாக விளையாட வேண்டிய நேரம்’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments