உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பணியாற்ற போகும் நடுவர்கள் இவர்கள்தான்!

சனி, 18 நவம்பர் 2023 (07:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை குஜராத் அகமதபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சியில் இரு அணிகளும்  ஈடுபட்டு வருகின்றன.

2003 ஆம் ஆண்டு இரு அணிகளும் உலகக் கோப்பை இறுதியில் மோதின. அந்த போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. அதற்கு பதிலளிக்க இந்திய அணி இந்த முறை தயாராக உள்ளது. இந்த போட்டியைக் காண 1.3 லட்சம் ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கு பணியாற்ற உள்ள நடுவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கள நடுவர்களாக ரிச்சர்ட் கெட்டில்பரோ, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் செயல்பட உள்ளனர். மூன்றாம் நடுவராக ஜோயல் வில்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டியின் ரெஃப்ரியாக ஆண்டி பைகிராஃப்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments