ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ராஜஸ்தான்..! – ஈடு கொடுக்குமா ஆர்சிபி?

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:01 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

முன்னதாக 2 போட்டிகளில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டிலுமே வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என்பதால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஆர்சிபி அணி இதுவரை 2 போட்டிகளில் களமிறங்கி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஆர்சிபி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டியது இருப்பதால் ஆர்சிபிக்கு இது முக்கியமான போட்டியாக அமையும். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments