Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே ரெண்டு டக் அவுட்.. அம்பயரிடம் ஜாலியாக சண்டை போட்ட ரோஹித் ஷர்மா!

Written By vinoth
Updated: வியாழன், 18 ஜனவரி 2024 (14:33 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி 69 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்களை 22 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. அந்த நிலையில் இருந்து அணியை 212 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றார் ரோஹித். இந்த சதம் அவர் சர்வதேச டி 20 போட்டிகளில் அடிக்கும் ஐந்தாவது சதமாகும்.

இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. ரோஹித் ஷர்மா பேட் செய்யும் போது ஒரு பவுண்டரி அடிக்க அதை லெக் பைஸ் என நடுவர் அறிவித்தார். ஆனால் அது பேட்டில் பட்டு சென்றது. அதனால் ரோஹித் ஜாலியாக நடுவரிடம் “ஏன் அதை லெக் பைஸ் கொடுத்தீர்கள். அது பேட்டில் பட்டுதான் சென்றது. ஏற்கனவே இந்த சீரிஸில் இரண்டு டக் அவுட்” என ஜாலியாக சீண்டினார்.

எல்லாம் காட்டு

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments