கடவுளுக்கு நன்றி… பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட ரிஷப் பண்ட்!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:28 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவரால் ஒரு ஆண்டுக்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை அவரால் விளையாட முடியாமல் போனது. அதே போல உலகக் கோப்பை தொடரையும் அவர் மிஸ் செய்யவுள்ளார்.

இப்போது இயல்பு நிலைக்கு திரும்பிவரும் ரிஷப் பண்ட் தான் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு “இருட்டின் பாதையில் மிகச்சிறிய வெளிச்சத்தையாவது காட்டியதற்கு கடவுளுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments