சூர்யகுமார் போன்ற வீரர்கள் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள்… கபில் தேவ் புகழ்ச்சி

திங்கள், 9 ஜனவரி 2023 (15:10 IST)
சமீபகாலமாக கிரிக்கெட்டின் சென்சேஷனான வீரராக கலக்கி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

அவரின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உச்சத்தில் உள்ளது. அவரை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் அன அழைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சூர்யகுமார் யாதவ்வை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதில் “இப்படி தாக்குதல் பேட்டிங் செய்பவர்களைப் பார்ப்பது அரிது. ஏபி டி வில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் போன்ற அற்புதமான வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சூர்யகுமார் போல விளையாடும் ஒரு சில வீரர்களே உள்ளனர்.

வீரர்களின் மனநிலையுடன் சூர்யகுமார் யாதவ் விளையாடுகிறார். பந்து வீச்சாளர் எங்கு இறங்கப் போகிறார் என்பதை அவர் முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். சில வீரர்களுக்கே இவ்வாறு விளையாட கடவுள் கொடுத்த திறமை உள்ளது. இது எளிதானது அல்ல. அவரைப் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை வருவார்கள்.” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

அடுத்த கட்டுரையில்
Show comments