1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (16:01 IST)

சூர்யகுமார் யாதவ்வை டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது: கவுதம் கம்பீர் கருத்து

Gambir
சுரேஷ் குமார் யாதவை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது என பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்தார் என்பதும் ஆட்டநாயகன் விருது பெற்ற அவரால் நேற்று இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சூரியகுமார் யாதவுக்கு அனைத்து தரப்பினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவரது ஆட்டம் குறித்து கௌதம் கௌதம் காம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுரேஷ் குமார் யாதவை டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva