Daily Horoscope

அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா!

Written By vinoth
Updated: புதன், 22 மார்ச் 2023 (15:06 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீல் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி சீராக விளையாடி வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச வந்த போது, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார்.

தற்போது வரை ஆஸி அணி 3 விக்கெட்களை இழந்து 94 ரன்களை சேர்த்து தொடர்ந்து ஆடி வருகிறது. களத்தில் டேவிட் வார்னரும், லபுஷானும் ஆடி வருகின்றனர்.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments