Daily Horoscope

டிராவை நோக்கி நான்காவது டெஸ்ட்… நிலைத்து நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்!

Written By vinoth
Updated: திங்கள், 13 மார்ச் 2023 (14:41 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். கடைசி கட்டத்தில் கோலி, இரட்டை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸி அணியும் நிலைத்து நின்று இந்திய அணி பவுலர்களை திணறடித்து வருகின்றனர். இதுவரை ஆஸி அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இன்னும் அரைநாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தற்போது களத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments