Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவை நோக்கி நான்காவது டெஸ்ட்… நிலைத்து நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்!

Written By vinoth
Updated: திங்கள், 13 மார்ச் 2023 (14:41 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். கடைசி கட்டத்தில் கோலி, இரட்டை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸி அணியும் நிலைத்து நின்று இந்திய அணி பவுலர்களை திணறடித்து வருகின்றனர். இதுவரை ஆஸி அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இன்னும் அரைநாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தற்போது களத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

அடுத்த கட்டுரையில்
Show comments