Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களின் பயிற்சிக்கு இடையூறு செய்த ரசிகர்கள்… பிசிசிஐ போட்ட தடா!

Written By vinoth
Updated: வியாழன், 5 டிசம்பர் 2024 (08:15 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதலில் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்முரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதைக் காண 3000க்கும் அதிகமான ரசிகர்கள் குழுமினர்.

ஆனால் அவர்கள் அமைதியாக பார்க்காமல், இந்திய வீரர்களைக் கிண்டல் செய்து கூச்சல் போட்டுள்ளனர். மேலும் ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் உடல் எடையைக் கிண்டல் செய்தும் பேசியுள்ளனர். இதனால் கடுப்பான இந்திய வீரர்கள் பயிற்சி முகாமை பாதியிலேயே ரத்து செய்து கிளம்பியுள்ளனர். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இனிமேல் வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு வலியுறுத்த அதை ஏற்றுக் கொண்டுள்ளது ஆஸி கிரிக்கெட் வாரியம். இனிமேல் வீரர்களின் பயிற்சி முகாமைப் பார்க்க ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments