இந்த முறை மினி ஏலத்தில் இவருக்குதான் செம்ம டிமாண்ட் இருக்கும்… சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

சனி, 19 நவம்பர் 2022 (15:14 IST)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அணிகளிடம் உள்ள தொகை குறித்த விவரங்கள்.

ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 போட்டிகள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நேற்று அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டன.

இதையடுத்து டிசம்பர் மாதத்தில் கோவாவில் மினி ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் கலந்துகொள்ளும் நிலையில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ்க்குத்தான் அதிக எதிர்பார்ப்பு அணிகள் மத்தியில் இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

மேலும் “பென் ஸ்டோக்ஸ் ஒரு மேட்ச் வின்னர். அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments