Daily Horoscope

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முடியாது… ஏன் தெரியுமா?

Written By vinoth
Updated: வியாழன், 7 நவம்பர் 2024 (09:34 IST)
தற்போது உலகக் கிரிக்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்காக அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் கடந்த் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் வந்து விளையாடினார்.

பென் ஸ்டோக்ஸ் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட போது   ஆண்டு 16.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதிலும் அவரின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

அதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவர் கலந்துகொள்ளவே இல்லை. இப்போது நடக்கவுள்ள மெகா ஏலத்திலும் அவர் தன்னுடைய பெயரை பதிவு செய்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகள் நடக்கும் மினி ஏலத்தில் அவரால் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவரால் ஐபிஎல் விளையாடமுடியாது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments