மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள்… ஆல் அவுட் ஆன ஆஸி!

வியாழன், 2 மார்ச் 2023 (11:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய முதல் நாள் முடிவில் 156 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை முடித்தது.

இரண்டாம் நாளை இன்று தொடங்கிய ஆஸி. அணி முதலில் சில ஓவர்களை சிறப்பாக எதிர்கொண்டாலும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 197 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளனர்.

இன்று 40 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளது ஆஸி அணி.  முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 88 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments