1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:59 IST)

உலகின் முதல் கொரோனா சோதனையை நிகழ்த்திய ரஷ்யா – போட்டுக்கொண்டது யார் தெரியுமா?

கொரோனா தடுப்பூசியை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்து ரஷ்யாவில் அது மனிதர்களுக்கு போடும் நிலைக்கு வந்துள்ளது.

கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல உலக நாடுகள் தங்கள் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பல நாடுகள் அவற்றில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தங்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்ததை அடுத்து மனிதர்களுக்கு போட முடிவு செய்துள்ளது ரஷ்யா. இதையடுத்து முதல் ஊசியை புதினி மகள்களில் ஒருவரே முதன் முதலாக போட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள புதின், ‘இந்த தடுப்பூசி எல்லாவிதமான சோதனைகளையும் தாண்டிவிட்டது. ஆனால் நாங்கள் யாரையும் வற்புறுத்தி இந்த ஊசியை போட சொல்லப்போவதில்லை. தன்னார்வமாக வருபவர்களுக்கே இந்த ஊசி போடப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.