1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (17:05 IST)

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…போதையில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட பெண்!

இங்கிலாந்தில் போதையில் வாஷிங் மெஷினுக்குள் காலைவிட்டு மாட்டிக்கொண்டுள்ளார் ஒரு பெண்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் 21 வயதான  ரோஸி கோல். பல்கலைக்கழக மாணவியான இவர் தன்னுடைய தோழிகளுடன் வீட்டில் நடந்த பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதையடுத்து தன்னை மறந்த நிலைக்கு சென்ற அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல் வாஷிங் மெஷினுக்குள் சென்று காலை விட்டுள்ளார். இதில் அவர் கால்கள் மாட்டிக்கொள்ள் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து அவரது தோழிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தர, அவர்கள் வந்து பத்திரமாக அவரை மீட்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.